பல நிறுவனங்கள் கோப் குழுவுக்கு அழைப்பு

இந்த வாரத்தில், பல நிறுவனங்கள் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் முன் அழைக்கப்பட உள்ளன.
பல நிறுவனங்கள் கோப் குழுவுக்கு அழைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த வாரத்தில், பல நிறுவனங்கள் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் முன் அழைக்கப்பட உள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை தேயிலை சபையின் அதிகாரிகள் இன்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாளை (20) லிமிடெட் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு மறுநாள் கொழும்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாளைய தினம் கூடவுள்ள அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவிற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாண சபையின் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இந்த வாரம் அரசாங்கக் கணக்குக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று (19) மற்றும் எதிர்வரும் 21 ஆம் திகதி கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -