அரசியலில் இருந்து எப்போது ஓய்வு... அறிவித்தார் ரொஷான்

என்றாவது ஒரு நாள் கண் பார்வை குறையும், ஒரு நாள் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் உண்மை.  

ஜனவரி 31, 2024 - 16:19
அரசியலில் இருந்து எப்போது ஓய்வு... அறிவித்தார் ரொஷான்

65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு வெளியேறி நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக செயற்படுவதற்கு தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வரம்பு நிர்வாகத்துக்கு செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் உண்மை.  65 ஆண்டுகளுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராக இருக்கிறோம். முன்னுதாரணமாக இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!