நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இலங்கையில் இன முரண்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக 1978களில் ஆரம்பித்த யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டதையடுத்து உருவாகியிருக்கின்ற நல்லிணக்க மற்றும் நல்லுறவு எவ்வாறான நிலையில் இருக்கிறது என்பது ஆராய்வுக்குரியதே.
மன்னன் இறந்த பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்பினர், தினமும் குதிரையில் நகர் வலம் வருவதை மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தார், இறந்த பின்னரும் அவர் குதிரையில் நகர் வலம் வருகின்றார் என்று மக்கள் நம்பினர், எனவே இவரைக் காவல் தெய்வமாகப் பிரகடனம் செய்தனர்.
ஓர் ஆசிரியையாக வரவேண்டும் என்றே கூறுவேன். உண்மையில் அதுதான் என் கனவும் இலட்சியமும்கூட. ஆனால், தந்தையின் குடிப்பழக்கத்தாலும் குடும்பத்தின் வறுமையாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு என் கனவுகள் கலைந்துவிட்டன. மீண்டும் பள்ளிக்குப் போவேனா என்ற பேராவலுடன் காத்திருக்கிறேன்' – என்று பத்து வயது சிறுமியான மதியரசி அழுதுகொண்டே கூறினாள்.
“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இரண்டொரு மாதங்களில் வெடித்துச் சிதறி, இன்று என் குடும்பத்துக்கு சுமையாய் வாழ்ந்து வருகிறேன்”.
அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துகளை தடுக்க யாழ்.மாவட்டத்தில் இன்று (31) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
அம்மா குப்பையள்ளுறவ என்டதால எங்களோட கதைக்கக்கூட பிள்ளையள் வரமாட்டார்கள் என கூறும் மயூரிகா. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கின்றார். மயூரிகா, அடுத்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளாள். ஆனால் இவளது மனதில் சஞ்சலமாகும் விடயங்களை தீர்ப்பதற்கு யாருமே முன்வருவதில்லை என்ற ஏக்கம் அவளுடன் பேசும்போது தெளிவாகத் தெரிந்தது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் விவசாயச் செய்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தை மாத்திரமே நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்லும் அவர்கள், மாற்றுத் தொழிலாக எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து 10 வயது தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின்போது தனது கணவரை இழந்த பத்மினி, தனது குடும்பத்தின் பொருளாதார சுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாதவராக கண்ணீர் வடிக்கும் நிலையில் இருக்கிறார்.
கண்டி திகன பகுதியில் 2018 மார்ச் 7 ஆம் திகதி இடம்பெற்ற திகன கலவரத்தில் தனது மகனான சம்சுதீன் அப்துல் வாசித் என்பவரை இழந்த தந்தையே றகீம் சம்சுதீன். சம்சுதீனின் மகன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு இவ் ஆண்டுடன் நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டன.