மருத்துவ பீட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம்

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

ஒக்டோபர் 27, 2023 - 23:33
மருத்துவ பீட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம்

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

கொழும்பில் உள்ள தாமரை தடாக திரையரங்குக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கை குழுவினால் இந்த எதிர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக கிரீன் பாத் வீதி, நெலும் பொக்குண சந்தியில் இருந்து கொழும்பு பொது நூலகம் வரையான பகுதியில் பாதிக்கப்பட்டிருந்தது. (நியூஸ்21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!