ஜூலை முதல் வாரத்தில் இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - காரணம் இதுதான்!

2024 ஜூலை முதல் வாரத்தில் 43,083 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜுலை 11, 2024 - 00:25
ஜூலை முதல் வாரத்தில் இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - காரணம் இதுதான்!

2024 ஜூலை முதல் வாரத்தில் 43,083 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 10 இலட்சத்து 53,332 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

ஜூலை 01-07 வரை, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பதிவாகியுள்ளனர், அவர்களின் எண்ணிக்கை 13,693 ஆகும்.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 3,455 சுற்றுலாப் பயணிகள், சீனாவிலிருந்து 2,640, ஆஸ்திரேலியாவில் இருந்து 2,318 மற்றும் ஜெர்மனியில் இருந்து 1,827 சுற்றுலாப் பயணிகள் முதல் ஐந்து மூலச் சந்தைகளில் இருந்து வந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி 12 நாட்களுக்கு நடைபெறும் போரா சர்வதேச மாநாட்டை இலங்கை நடத்துவதால், ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

போரா சர்வதேச மாநாட்டின் மூலம் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட மத பார்வையாளர்கள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!