இலங்கையில் நிபா வைரஸ்? வெளியான தகவல்!
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாக தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ள தவறான செய்தி என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நிபா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் எவரும் இலங்கையில் இதுவரை பதிவாகவில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற பயப்பட வேண்டாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.
