ஜார்க்கண்ட் ரயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்

ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

ஜுலை 30, 2024 - 16:35
ஜார்க்கண்ட் ரயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை - ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இதில் ரயிலின் 18-பெட்டிகள் தடம் புரண்டன . இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!