முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறும் வரை, நீதியை உறுதி செய்வதற்கு சர்வதேச நடவடிக்கை அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து பொறுப்புக்கூறலைக் கோருவதற்காக பிரிட்டன் உட்பட பல நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியான திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இந்த விடயத்தில் எந்த முயற்சியும் எடுக்காத வரை, வெளிநாடுகள் தொடர்ந்து தடைகளை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபை கிடைக்கக்கூடிய ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்ய ஆகியோர் மீது திங்கட்கிழமை ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது.
அத்துடன், விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் தலைவரான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மீதும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்திருந்தது.