இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகின்றது
இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, இன்று (26) இலங்கையில் நங்கூரமிடப்படவுள்ளது.
எரிபொருள் மீள் நிரப்பல் மற்றும் ஏனைய கப்பல் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்தியக் கப்பல் இங்கு வருகின்றது.
மாலுமிகள் ஓய்வெடுக்கவுள்ளதுடன், கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர்.
இதேவேளை, ஐஎன்எஸ் மும்பை கப்பலானது 29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
