மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.

நவம்பர் 15, 2023 - 00:12
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!