தனியார் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது குளவி கொட்டு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் தனியார் வகுப்பு சென்ற மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவை சேர்ந்த 13 வயதுடைய மாணவர்கள், தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
3 மாணவர்கள் 9 மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
