லெபனானின் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் பலி

லெபனான் நாட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்த அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.
லெபனானின் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

லெபனான் நாட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்த அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை இறுதியில் முகாமில் வைத்து பலியானார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7-ந்தேதி முதல் முகாமில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த மோதலில் ஆயுதமேந்திய போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தொடக்கத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து முகாமில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தப்பி வெளியேறி வருகின்றனர்.

அவர்களில் பலர் உள்ளூர் மசூதிகள், பள்ளிகள் மற்றும் சிடான் நகராட்சி கட்டிடம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில், மோதல் சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

லெபனானில் 55 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -