சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை
இலங்கையில் உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனால், மரக்கறி வியாபாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக காய்கறி வரத்து குறைவடைந்துள்ளமையால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் தற்போதைய மரக்கறி விலைகள்
ஒரு கிலோகிராம் போஞ்சு ரூ.600
கரட் ஒரு கிலோகிராம் ரூ.450
கத்திரிக்காய் ரூ.300
தக்காளி ரூ.480
மிளகாய் ரூ.700
பச்சை மிளகாய் ரூ.1500
குண்டு மிளகாய் ரூ.2000
லீக்ஸ் ரூ 280