கிராண்ட்பாஸ் இரட்டை கொலை - மூன்று பேர் அதிரடியாக கைது
கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும்அதற்கு ஆதரவு வழங்கிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்,
26, 37 மற்றும் 45 வயதுடைய, ஒருகொடவத்தை மற்றும் வெல்லம்பிட்டியவை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் முன் முச்சக்கரவண்டியில் இருந்த நபர் மற்றும் பெண் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.