போதைப்பொருட்கள், பணத்துடன் மூவர் கைது

இரகசிய தகவலின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது, இன்று (09) காலையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருட்கள், பணத்துடன் மூவர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை, நிந்தவூர் பொலிஸார் கைது செய்தனர்.

அம்பாறை - நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நேற்று (08)  மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம் மற்றும் போதைப்பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரகசிய தகவலின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது, இன்று (09) காலையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கைது செய்யப்பட்ட 32, 33 மற்றும் 34 வயதுடைய 3  சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

(பாறுக் ஷிஹான்)

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -