மேர்வின் சில்வா நில மோசடியில் மேலும் ஆறு பேர் கைது
இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பெலவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்

களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேர் நிலத்துக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து 75 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பெலவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.