ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்; சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்

விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று (8) குற்றப் புலனாய்வுத் துறை உபுல்தெனியவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்; சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை அனுமதியின்றி விடுவித்த குற்றச்சாட்டில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

துஷார உப்புல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று (8) குற்றப் புலனாய்வுத் துறை உபுல்தெனியவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.

சில கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க ஜனாதிபதி பொதுமன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனாதிபதி செயலகம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதாகக் கூறி, வெசாக் போயா தினத்தன்று அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதியை விடுவித்ததற்காக, அநுராதபுரம் சிறைச்சாலையின் உதவி ஆணையர் நேற்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -