பஸ்களிலும் ‘யுக்திய’ விசேட  சோதனை நடவடிக்கை

ஒரு வார காலத்துக்கு இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுலில் இருக்கும்.
பஸ்களிலும் ‘யுக்திய’ விசேட  சோதனை நடவடிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ என்ற விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -