இலங்கையை வந்தடைந்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

டிசம்பர் 21, 2023 - 12:43
இலங்கையை வந்தடைந்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா, நேற்று (20) கொழும்புக்கு வந்துள்ளார்.

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

முன்னதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்ட கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக பெயரிடப்பட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!