நுவரெலியாவில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணி
நுவரெலியாவை பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் .
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நுவரெலியாவை பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் . உயிரிழந்த இந்திய பிரஜை 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். இந் நிலையில் நேற்று (25) நுவரெலியாவுக்கு வந்து மாலை 6:30 மணியளவில் தங்கியிருந்த விடுதியில் இருந்து பிரதான நகருக்கு இரவு உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்த போது, திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அவர், உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன் மரணித்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -