இந்திய நிதி அமைச்சருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசாங்கத்தின் பிரமுகர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசாங்கத்தின் பிரமுகர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
'நாம் 200' நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நாளை (02) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாக இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார்.
இந்திய நிதி அமைச்சர் இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்களையும் நடத்த உள்ளார்.
இதேவேளை, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானம் ஊடாக கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதுடன், இன்று மாலை திருகோணமலைக்கு செல்லவுள்ளமை குறிப்பித்தக்கது.