நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் கனமழைக்கு வாய்ப்பு

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

ஏப்ரல் 12, 2025 - 10:50
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (12) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 10 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது நிலவும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதேவேளை, சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால் இந்த நாட்களில் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலே நேரடியாக காணப்படும். இன்று மதியம் 12:11 மணியளவில் ஆதியகுளம், வேப்பங்குளம், பதவி மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சநிலையில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!