மோசமடைந்துள்ள காற்றின் தரம்; சுவாச நோயாளிகள் அவதானம்

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசமடைந்துள்ள காற்றின் தரம்; சுவாச நோயாளிகள் அவதானம்
காற்று மாசு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, கொழும்பின் காற்று மாசு மதிப்பு 127 ஆக பதிவாகியுள்ளதால், இந்த நிலை சுவாச நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அநுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.

நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50 ஐ தாண்டி உள்ள நிலையில், சுவாச நோயாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மக்கள் இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -