பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அத்துடன், இந்தத் தொகையானது மாணவர்களின் உணவுக்கு கட்டாயமாக செலவிடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 1, 2024 - 23:03
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாளாந்த மதிய உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துக்காக அரசாங்கம் 1600 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மாணவர் ஒருவருக்கு நாளாந்தம் 110 ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

அத்துடன், இந்தத் தொகையானது மாணவர்களின் உணவுக்கு கட்டாயமாக செலவிடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!