கொழும்பு மாவட்டத்தில் அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதம் - ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதம் - ஆய்வில் வெளியான தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நகரமயமாக்கல் ஒரு நாட்டின் அபிவிருத்தியை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். இலங்கையில் நகரமயமாக்கல் தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

சனத்தொகை  மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் நகரமயமாக்கல் 18.2% ஆகும். ஒரு பகுதியின் நகரமயமாக்கல் பல அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. 

இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள 276 உள்ளூராட்சி சபைகளில் உள்ள 12,773 கிராம அலுவலர் பிரிவுகளில் 3,025  நகர்ப்புறங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இது  23.68% ஆகும். இந்த கணக்கெடுப்பின்படி, அதிக நகர்ப்புற சனத்தொகை  சதவீதத்தைக் கொண்ட மாவட்டம் கொழும்பு ஆகும். இதன் சதவீதம் 96.74%. கம்பஹா மாவட்டம் 76.76% வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.28% வீதத்தையும் காட்டுகிறது. நகர்ப்புற சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2.84% ஆகும்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -