இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி,நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

ஏப்ரல் 9, 2024 - 12:13
இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன், அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி,நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

மேலும்  சூரியன் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!