நபரொருவர் மர்ம மரணம்; வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு
நேற்று (18) பிற்பகல், மாத்தறை, வெரதுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
