சிறைச்சாலை திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

பல சிறைச்சாலை அத்தியட்சகர்களின் கடமைகளும் மாற்றப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2, 2024 - 12:27
சிறைச்சாலை திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களுக்கு புதிய விடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை ஆணையாளராக (தொழில்துறை) பணியாற்றிய அஜித் பஸ்நாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் கட்டுப்பாட்டாளராகவும், சிறைச்சாலை ஆணையாளராக (புனர்வாழ்வு ) பணியாற்றிய காமினி பி.திசாநாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் (நடவடிக்கைகள், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு) அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதயும் படிங்க: அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு

இது தவிர, பல சிறைச்சாலை அத்தியட்சகர்களின் கடமைகளும் மாற்றப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், 14 சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி சிறை கண்காணிப்பாளர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், உதவி சிறைச்சாலை அத்தியட்சகர்களாக 11 பேருக்கு புதிய நியமனங்களுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 20 தலைமை ஜெயிலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!