55 வயது வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 1, 2024 - 09:24
ஒக்டோபர் 1, 2024 - 09:24
55 வயது வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஹங்வெல்ல, நெலுவத்துடுவவில் உள்ள அவரது வீட்டில் 55 வயதுடைய வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டவர் T-56 துப்பாக்கியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் கொலைக்கான நோக்கம் அல்லது சந்தேக நபர்கள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!