குவைத்தில் நிர்கதியான 35 பேர் நாடு திரும்பினர்

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்ததாக 33 பெண்கள் மற்றும் 2 ஆண்களே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

நவம்பர் 30, 2023 - 14:52
குவைத்தில் நிர்கதியான 35 பேர் நாடு திரும்பினர்

கொழும்பு, நவ.30 (நியூஸ்21) - குவைத்தில் நிர்கதிக்குள்ளாகிய நிலையில் இருந்த 35 இலங்கை பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று(29) நாடு திரும்பியுள்ளனர்.

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்ததாக 33 பெண்கள் மற்றும் 2 ஆண்களே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: 7 நாடுகளுக்கு இலவச வீசா... உடனடியாக அமுல்! எவ்வாறு பெறுவது?

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குவைத அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!