தாழமுக்கம் - இலங்கைக்கு அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாழமுக்கம் - இலங்கைக்கு அவசர எச்சரிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 100மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை, காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், தங்களுடைய கால்நடைகளை இக்காலப் பகுதிகளில் மிகவும் கவனமாக பராமரிப்பதுடன், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து அல்லது மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -