அஸ்வெசும வங்கி கணக்கு திறக்கவுள்ள மக்கள் விசேட அறிவிப்பு

அஸ்வெசும வங்கி கணக்குகளைத் திறந்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜுலை 29, 2023 - 10:12
அஸ்வெசும வங்கி கணக்கு திறக்கவுள்ள மக்கள் விசேட அறிவிப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று(29) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும வங்கி கணக்குகளைத் திறந்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை 8.30 மணி முதல் அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இதற்காக திறந்திருக்கும்.

மேலும், தேவை ஏற்படின் நாளை(30) ஞாயிற்றுக்கிழமையும் வங்கி கிளைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!