அமைச்சர் கெஹலிய மீது நம்பிக்கையில்லா பிரேரணை?

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜுலை 17, 2023 - 10:56
அமைச்சர் கெஹலிய மீது நம்பிக்கையில்லா பிரேரணை?

நம்பிக்கையில்லா பிரேரணை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று(16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறும் பணி இன்று (17) முதல் தொடங்கும் என்று முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பிரேரணையை சுகாதார அமைச்சருக்கு மட்டுமல்ல, ராஜபக்ஷ - விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராகவும் கொண்டு வருகிறோம். இதற்கு அமைச்சரவை மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். நாளை முதல் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியின் சில குழுக்களும் பேச்சுவார்த்தையைத் தொடங்கும்." என்றார்.

இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"சுகாதார அமைச்சரை இதிலிருந்து நீக்கி சுதந்திரமான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும். இந்த உயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏனென்றால் பார்வையற்றவர்களுக்கு பண இழப்பீடு வழங்குவதாக கெஹலிய ரம்புக்வெல்ல கூறியதை நான் பார்த்தேன். 

இழப்பீடு வழங்க முடியுமா? இரண்டு கண்களுக்கு என்ன இழப்பீடு? இரண்டு கண்ணுக்கு என்ன நஷ்டஈடு கொடுப்பது? பார்வை மட்டுமே இழப்பீடு. அதற்கு மேற்பட்ட இழப்பீடு இல்லை. 

மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும். எனவே, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாத்திரமல்ல இந்த அரசாங்கத்துக்கும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைக் கொண்டுவர வேண்டும்” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!