தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஜுலை 22, 2024 - 13:27
தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த கற்குழியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையதுத்து, தாயின் சடலம் நேற்றிரவு (21) மீட்கப்பட்டதுடன், பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!