மலேசியாவில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழப்பு
மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளார்

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளார்
மலேசியாவின் ஷா ஆலம், தாமன் ஆலம் இண்டாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
சடலத்தை மீட்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை, மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.