முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மகனும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவால் கைது!
சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர், ஜனவரி 5, 2026 அன்று காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று FCID யில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டதாகவும், அவர் இணங்கத் தவறினால் நீதிமன்றத்திடம் பிடியாணை கோரப்படும் என்றும் எச்சரித்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வந்திருந்தார்.
அவர், வாக்குமூலம் அளிக்கும் நோக்கத்துடன் FCID அலுவலகத்தில் முன்னிலையான போது, உடனடியாக கைது செய்யப்பட்டார். அதே விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.