மலையக ரயில் சேவை பாதிப்பு; டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டது! 

இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
மலையக ரயில் சேவை பாதிப்பு; டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டது! 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயில், ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லூக்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று (21) காலை 7.15 மணியளவில், ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று, ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் மோதியதால், கட்டடத்திற்கும் ரயில் பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள், ஹட்டன் ரயில் நிலையம் வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை வரை செல்லும் அனைத்து ரயில்களும் கொட்டகலை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

(க.கிஷாந்தன்)

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -