மூன்று கோள்கள் நெருக்கமாக தோன்றும் அரிய காட்சி நாளை தென்படும்
இந்த அரிதான காட்சியை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் என்பதுடன், தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் தேவையில்லை.

வெள்ளி, சனி கோள்கள் மற்றும் சந்திரன் என்பன வானில் நெருக்கமாகத் தோன்றும் அரிதான காட்சி நாளை வெள்ளிக்கிழமை (25) நிகழவுள்ளது.
இதனை, அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானில் காண முடியும் என, கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க | மாணவிகளுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியையிடம் விசாரணை
இந்த அரிதான காட்சியை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் என்பதுடன், தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் தேவையில்லை.
சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் இந்த அரிய காட்சி சுமார் ஒரு மணி நேரம் தென்படும். இலங்கையில் மட்டுமின்றி உலகில் எந்த பாகத்தில் உள்ளவர்களும் இதனை பார்க்க முடியும்.