யாழ். பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் சென்றுக்கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்று (02) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆட்டோவில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரே மாணவர்களை தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

