வட மாகாண உள்ளூர் சேவைகளுக்கு 24 பஸ்கள் வழங்கிவைப்பு

வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கான இந்த பஸ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

ஜுலை 14, 2023 - 13:10
வட மாகாண உள்ளூர் சேவைகளுக்கு 24 பஸ்கள் வழங்கிவைப்பு

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 1 கோடி ரூபாய் பெறுமதியான 24  பஸ்கள், வட மாகாணத்தில் உள்ளூர் வீதிகளில் போக்குவரத்துப் பயன்படுத்துவதற்காக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவால் வழங்கப்பட்டன. 

வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கான இந்த பஸ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் ஊடக அமைச்சர், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் துணை தூதுவர் ராகேஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

(தங்கராசா சுமித்தி)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!