ஈரானில் போராட்டங்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; என்ன நடக்கிறது அங்கே?
பிபிசி உட்பட சர்வதேச ஊடகங்கள் ஈரானில் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் மூலம் தொடர்பு கொள்ளப்பட்ட மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை விவரித்துள்ளனர்.
ஈரானில் தொடரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் காரணமாக மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன என ஈரானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி உட்பட சர்வதேச ஊடகங்கள் ஈரானில் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் மூலம் தொடர்பு கொள்ளப்பட்ட மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை விவரித்துள்ளனர்.
தெஹ்ரானில் உள்ள ஃபராபி கண் மருத்துவமனை நெருக்கடி நிலைக்குச் சென்றுவிட்டதாக ஒரு மருத்துவர் தெரிவித்தார். அவசர சேவைகள் அதிகமாக இருப்பதால், அவசரமற்ற சேர்க்கைகளும் அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஷிராஸ் நகரில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், காயமடைந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அழைத்து வரப்படுவதாகவும், அவர்களில் பலருக்கு தலை மற்றும் கண்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மருத்துவமனையில் போதுமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் “பெரிய சிக்கலில்” இருப்பதாகவும், “நாங்களும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்குவோம், எனவே நீங்கள் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கக்கூடாது” என்று எச்சரித்தார்.
இதற்கு பதிலாக, ஈரான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில், போராட்டங்களை “வன்முறை நாசவேலை” என்று அழைத்து, அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ளது.
வியாழக்கிழமை மாலை முதல் ஈரான் முழுவதும் கிட்டத்தட்ட மொத்த இணைய முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சம்பவங்களை சரிபார்ப்பதும், தகவல்களை சேகரிப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. இரு மனித உரிமைகள் குழுக்கள், குறைந்தது 50 பேர் போராட்டங்களில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.