புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் அநுரகுமார திசாநாயக்க
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க, இன்று திங்கட்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
