2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதல் தவணை இன்று ஆரம்பம்; தரம் 1 மற்றும் 6 தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவினாக்களில் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி 5, 2026 - 07:05
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதல் தவணை இன்று ஆரம்பம்; தரம் 1 மற்றும் 6 தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று  (05) தொடங்கியுள்ளன.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவினாக்களில் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை டிசம்பர் 22 ஆம் திகதிதியும், முஸ்லிம் பாடசாலைகள் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை டிசம்பர் 26 ஆம் திகதியும் முடிவுக்குக் கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இருப்பினும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், புதிய பாடத்திட்டம் தரம் 1 க்கு ஜனவரி 29 ஆம் திகதியும், தரம் 6 க்கு ஜனவரி 21 ஆம் திகதியும் தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இருந்தபோதிலும், புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 க்கு மாணவர்களை சேர்க்கும் நிர்வாகப் பணிகளை இன்று முதல் அடுத்த வாரத்திற்குள் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த மக்களைக் கொண்ட பல பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்று முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறும், அதே நேரத்தில் டிட்வா சூறாவளி காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!