ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசர தீர்மானம்
ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
