இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி.. 18 பேர் காயம்!
அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் உள்ள இரவு விடுதியில் ரைபிள் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் விடுதியில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான்.
தகவலின்பேரில் பொலிஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில், 22 வயதான ஆண்டர்சன் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் கண்டித்துள்ளார்.
