இலங்கையில் நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் மக்கள்

இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் தங்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் நிலை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 23, 2025 - 15:24
இலங்கையில் நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் மக்கள்

இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் தங்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் நிலை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து உயர்ந்த வாழ்க்கைச் செலவு பலரையும் நிதி சிக்கல்கள் மற்றும் மன அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. மருத்துவ நிபுணர்கள் கூறுவதின் படி, அதிக கடன் சுமை பலரிடமும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கும் முக்கிய காரணங்களாக மாறியுள்ளது.

வாழ்க்கைச் செலவு குறித்த உலகளாவிய தரவுகளை வழங்கும் Numbeoவின் சமீபத்திய ஆய்வு படி, தெற்காசியாவில் வாழுவதற்கு செலவு அதிகமான இரண்டாவது நாடாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி, கொழும்பில் வசிக்கும் நால்வர் கொண்ட குடும்பம் ஒன்று, வீட்டு வாடகையை தவிர்த்து மாதத்திற்கு சுமார் 570,997 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் நிலையில், தனிநபர் வாழ்க்கைச் செலவு 153,899 ரூபாய் அல்லது சுமார் 506 அமெரிக்க டொலர் என கணிக்கப்பட்டுள்ளது.

வருமானம் குறையும் நிலையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பலர் தனிநபர் கடன்களை நம்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக இந்த ஆண்டுக்குள் தங்க அடகு கடன்களின் மொத்த மதிப்பு 365.5 பில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வட்டி விகிதங்கள் உயர்வதால் பலரால் அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

கடன் சுமையால் மக்கள் விரைவில் பணம் சம்பாதிக்க முயலும் போது பிரமிட் திட்டங்கள் போன்ற மோசடி முறைகளில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் அதிகரித்துள்ளதாகவும் — குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!