பாடசாலைகள் மற்றும் முன் பள்ளிகளுக்கு விசேட விடுமுறை – கனமழை எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் முன் பள்ளிகளுக்கு விசேட விடுமுறை – கனமழை எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடக பிரிவு நேற்றைய தினம் (நவம்பர் 26) வெளியிட்ட தகவலின் படி, இன்று (27) முதல் புதிய அறிவிப்பு வரும் வரை இந்த பாடசாலைகள் திறக்கப்படாது.

இலங்கைக்கு தென் மேற்கு மற்றும் தென்கிழக்கில் உருவாகிய காற்றுச் சுழற்சிகள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இணைந்தது, இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குட்பட்ட பல பகுதிகளில் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், இன்று முதல் 29ஆம் திகதி வரை, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை, கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் தொடக்கம் 30ஆம் திகதி வரை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியக முகாமையாளர் ஜெயவதனன் தெரிவித்தார். குறிப்பாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தொடர்ந்த கனமழை மற்றும் வெள்ள நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, சீரற்ற காலநிலை தொடர்பான அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT