நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்... மக்களே அவதானம்!

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

டிசம்பர் 17, 2023 - 12:25
டிசம்பர் 17, 2023 - 17:05
நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்... மக்களே அவதானம்!

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன், வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதையும் படிங்க: லைபேசி மற்றும் உபகரணங்களின் விலை  தொடர்பில் அதிர்ச்சி தகவல்

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!