விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை முறைகேடான வழிகளில் ஈட்டியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததன் மூலம் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக தெரிவித்து, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர