வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல்: பெண் கைது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல்: பெண் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், விசேட கூட்டு நடவடிக்கையொன்றின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்படைக் கட்டளைப் பிரிவின் ‘எஸ்.எல்.என்.எஸ். கோட்டாபய’ கடற்படை முகாமின் உத்தியோகத்தர்களும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து, நேற்று திங்கட்கிழமை (07) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சந்தேகத்துக்கிடமான மீன் சேகரிப்பு நிலையமொன்றை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோதே, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த பெருமளவிலான மீன் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மீன் தொகையும், கைது செய்யப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -